Saturday, January 21, 2012

Funny images... version 3.. ;)

வணக்கம் மச்சி ....... என்னங்க ரொம்ப நாளா என்னை காணும்னு பார்த்தீங்களா ... தேடி இருந்தா ரொம்ப சந்தோஷம்ங்க ... என்ன விஷயம்ன நம்ம ஊரு பக்கம் வந்துட்டேனுங்க அதான் ... சரி சரி ரொம்ப அலட்டாதடா விஷயத்துக்கு வா நு நீங்க போடுற சத்தம் லைட்டா கேக்குது வாங்க உள்ள போவோம் ....


முதலாவது விஷயம் சாமிய நினைச்சு தொடங்குவம்னு நினைச்சா .... அவர்ட வேலைய பாருங்களேன் .... பயபுளைங்க இவரையும் கேடுத்துட்டான்களே .... இனி சாமி கதி கோவிந்தா கோவிந்தா தான் ...






சரி சாமிய பார்த்துட்டம் இப்போ ஆசாமிய பார்ப்பமா .... 
யாருங்க இந்த ஆசாமின்னு கேக்காதேங்க ஏன்னா நம்மல்ல நிறைய பேர் இப்படி தானுங்க திரியுறாங்க .... சொன்ன நம்ப மாட்டீங்க நானே  2 ,3 பயபுள்ளைங்க கிட்ட கதைய கொடுத்து ஏமாந்து போய்தான் எண்டா பாருங்களேன் ......


இனி கொஞ்சம் உஷாரா இருப்பீங்களே ......;)



நம்ம லவ்வு ரொம்ப நாளா ஒரு மோதிரம் கேக்குதுங்க அதான் இந்த மாதிரி போடவனு ரொம்ப கஷ்டப்பட்டு தேடி டிசைன் காட்டினன் ... 
அவ இருந்த கடுப்புல என்னை போட்டு செம அடி.... (kiss அடி னு வாசிங்க சார் ) ... நம்ம அறிவாளித்தனம் பார்த்து அப்படியே ஆடி போயிட்டான்னா பாருங்களேன் ....
ஆனா அவ சொன்ன விளக்கம் ரொம்ப பிடிச்சிருந்துச்சு நீங்க வேணாம்னு சொன்னாலும் நான் சொல்லுவனே ... 
நீயும் நானும் ஒரு நாளும் பிரிய கூடாது அப்படியே ஒரு சண்டை சச்சரவு எண்டாலும் நாம ஒருத்தருக்கு ஒருத்தர் எவளவு ஒற்றுமையா இருந்தம் எப்படி வாழணும்னு யோசிச்சம் எண்டத எல்லாம் இந்த ஒன்னுக்குள ஒன்ன இருக்க ஸ்க்ரூ நட் நமக்கு புரிய வைக்கும்னு சொன்ன .... அப்புறம் தன சீரியசாவே இப்படி ஒரு செட் செய்யணும்னு நினைச்சு கொண்டன்........

சார் மீதிய அப்புறம் பார்ப்பமா .... அவ கால் பண்ணுற ஆன்சர் பண்ணலைனா இங்கயே வந்துடுவா .... அதன் அப்போ போயிட்டு வாறன் ... டாட்டா :) :D



Saturday, November 12, 2011

fun images ... version 2

வணக்கமுங்க ...... இண்டைக்கும் கொஞ்சம் கோக்குமாக்கான படங்கள் கொஞ்சம் வச்சிருக்கேன் பாருங்க ...... ஹி ஹி நல்லா சிரிங்க முடிஞ்சா கொஞ்சம் யோசிங்க பா.
அப்ப பாருங்களேன் இவங்கட சேட்டைய .....ஆனா பயபுள்ள நல்ல விஷயத்த இப்படியாச்சும் சொல்லி  புரிய வச்சதுக்கு நன்றி ....

 ஒவ்வொரு நாய்க்கு ஒவ்வொரு  பீல் ......இல்லை இல்லை ஒவ்வொரு வாலுக்கு ஒவ்வொரு பீல் .... 


 நான் எழுதுறதுல ஏதாச்சும் ஒன்னு முடிஞ்சா கண்டு பிடிங்க பாப்பம் ... முடியாதுள்ள ஏன்னா நான் என்ன எழுதுறேன்னு எனக்கே தெரியலையே.........மச்சி மம்மிகிட்ட ஒரு ஹோர்லிக்ஸ் சொல்லேன்  ப்ளீஸ்  ......

 இவ்வளோ தாங்க என்னால முடிஞ்ச டான்சு .... ஸ்கூல் படிக்குரப்போ டீச்சர் சொல்லி தரல ... யுனிவெர்சிட்டி ல லேக்ட்சுரர் சொல்லி தரல ...கண் கண்ட தெய்வம் பேஸ்புக் தான் சொல்லி தந்தது ...


 சரி சரி இண்டைக்கு இது போதும் எல்லாத்தையும் போட்டுட்டா நான் எப்படி காலம் ஓட்டுவன்.... இன்று போய் நாளை வரேன் .... டா டா .... பை பை :) :D :)







Tuesday, November 8, 2011

Fun images ... version 1

vadivelu:- dei dei dei manusana nimathiya engileesu kathaika vidurengalada.... room potu yosichu epo parthalum asingapaduthurathe velaya pochu
katta thoraiku kattam sari ila eduda vandiya....grrrrrrr

seruppu pinjudum raskal.... ohhh sotty seruppu odanjudum raskal....:P
ithuku than andaiku en kai regaya eduthangala..... nama avalo pemas(famous) ah ..... :D



ithula time paka kathukolunga sir maths elam jujupiiiii.........




அடுத்த பதிவுல சந்திக்கிறேன் .... டாட்டா .... பை பை .....:)





Indraya comedy sir....

1kum,11kum,111kum enna difference ...?

1 தனிய இருக்கு
11 ஜோடிய இருக்கு
111 familiy'a இருக்கு
அன்றைய பள்ளி நாட்களிலிருந்து
இன்றைய பணிபுரியும் நாட்கள் வரை
விடுமுறை நாட்களை எதிர்பார்த்தே கழிகிறது - தொட்டில் பழக்கம்.
நிச்சயத்தின்போது…
மகன்: “யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!”
அப்பா: “உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!”
சிரித்துக்கொண்டே இருப்பதற்கு புகைப்படம் போல வாழ்க்கையில்லை!!!! ஆனால் இப்படி சிரிக்காமல் இருப்பது வாழ்வதற்கே அர்த்தமில்லை...
 சரக்கடிக்கிற பசங்க எல்லாம்..
வாந்தி எடுத்ததும் சொல்லும் ஒரே வார்த்தை
இனிமேல் சத்தியமா இந்த எழவ குடிக்க மாட்டேன்டா...! # வாயக்கழுவங்கடா டே
பொங்கல் வரை தாங்குமாடா உங்க சத்தியம்....
 

மவுஸை பயன்படுத்தும் வழிமுறைகள்


கணணியுடன் இணைந்து நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுசும் மாறிவிட்டது.
நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கைகளில் குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர்.
இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.
1.முதலாவதாக மவுஸ் பிடித்திருக்கும் முறையில் அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான் மவுஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. மவுஸ் பிடித்திருக்கையில் அதனை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மிக மெதுவாகப் பட்டும் படாமல் நம் கரத்தினை அதன் மீது வைத்து இயக்கலாம்.
3.மவுஸ் இயக்கப்படுகையில் உங்களுடைய மணிக்கட்டு தசை அதிகம் இயங்கக் கூடாது. முழங்கை தசைதான் அதனை இயக்கும் செயல்பாட்டின் மையமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மணிக் கட்டினை நேராகவும் நடுவாகவும் வைக்கவும்.
4. உங்களுடைய நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கரங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் மவுஸ் பிடிக்கும் உங்கள் கரத்தை, பெரும்பாலும் வலது கரம், சற்றுத் தூக்குங்கள். உங்கள் கை முழங்கைக்குச் சற்று மேலாக இருக்கும் வகையில் தூக்குங்கள்.
மவுஸை கீ போர்டு இருக்கும் இடத்திற்கும் அருகே அதே தளத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். கீ போர்டுக்கு 1அல்லது 2 அங்குலம் மேலாக இருக்கும்படி மவுஸ் இடம் பெற வேண்டும். இந்த மவுஸ் அமரும் இடம் சற்றுக் கீழாக சரிவாக இருக்கும்படியாகவும் அமைக்கலாம்.
5. நீங்கள் மணிக்கட்டின் அமைப்பைச் சற்று சிரத்தையுடன் கவனித்தால் ஒன்று புரியும். இது இயற்கையாகவே சற்று வளைந்த நிலையில் உள்ளது. தட்டையான ஒரு தளத்தில் மணிக்கட்டை வைத்துப் பாருங்கள். வளைவான மணிக்கட்டின் கீழாக ஒரு சிறிய பேனாவினை நுழைத்து எடுக்கும் அளவிற்கு அது வளைவாக இருக்கும்.
இதனுடன் எந்த தள அழுத்தமும் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் முன் கரம் மணிக்கட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மவுஸ் பயன்படுத்துவதற்காகமணிக்கட்டினைத் தளத்தோடு அழுத்து வது இயற்கைக்கு முரணானது.
6. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மணிக்கட்டின் தோலுக்குச் சற்று அடியிலேயே ரத்த நாளங்கள் செல்லும். அதனால் தான் நாடித் துடிப்பினை இங்கு பார்க்கிறோம். எனவே இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அது ரத்த ஓட்டத்தில் சிறிதளவேனும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் இங்கு காயம் ஏற்படும்வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
7. ஒரு சிலர் மணிக்கட்டுப் பகுதிக்கென தனியே ஒரு சப்போர்ட் அமைத்து இயக்குவார்கள். கைக்குட்டையைக் கூட மடித்து வைத்துப் பயன்படுத்துவார்கள். இது கூடவே கூடாது. இது பிரச்சினையை மேலும் பெரிதாக மாற்றிவிடும்.
8. ஒரு சிலர் கரங்களுக்கு மெதுவாக இருப்பதற்கென மென்மையான சப்போர்ட் ஒன்றை நாற்காலியின் கரங்களில் வைத்துப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு பயன்படுத்துகையில் கரங்களை அதிலிருந்து எடுக்க மாட்டார்கள். ஒரு வகையில்கரங்கள் கட்டிப் போட்டது போல மாறுகிறது. இதனால் மணிக்கட்டிற்கு அதிக வேலை கிடைக்கிறது. இது மிகவும் பிரச்னையைத் தரும்.
9. ஒரு சம தளத்தில் கையை வைத்து இயக்குகையில், நம் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் அதனை அமர்த்தி இயக்க வேண்டும். கீ போர்டினை இயக்குகையில் இது மிகவும் உதவியாக இருக்கும்.
ஆனால் மவுஸ் பயன்பாடு கீ போர்டு பயன் பாட்டிலிருந்து மாறுபட்டது. கீ போர்டில் கரங்களை உள்ளங்கை சப்போர்ட்டில் வைத்துப் பின் விரல்களை மட்டுமோ, கரங்களையோ இயக்கிப் பின் அவ்வப்போது உள்ளங்கை அடிப் பகுதியில் வைத்துஓய்வளிக்கலாம்.
ஆனால் மவுஸ் இயக்கம் அப்படிப்பட்டதல்ல. இங்கு ஒரு தளத்தின் மீது முழு மவுஸ் சாதனமும் நகர்த்தி இயக்கப்படுகிறது. மவுஸ் நகர்த்தல் முழுமையும் முழங்கையை இயக்கத்தின் நடுப்புள்ளி யாக வைத்து இயக்கப்பட வேண்டும்.
மணிக்கட்டு நடு இயக்கப் புள்ளியாக அமையக் கூடாது. முன்கை, கை மற்றும் மவுஸ் இயங்குவதைத் தடுக்கும் வகையில் செயல்பாடு எது இருந்தாலும், அது பிரச்சினையைக் கொடுக்கும்.
10. இப்போது ஸ்டைல் என்ற பெயரில் பல வடிவங்களில்,பெரும்பாலும் தேவையற்ற வளைவுகளில் மவுஸ் சாதனங்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. இது போன்ற வளைவான மவுஸ் பயன்பாட்டிற்குச் சரியானதல்ல.
இரு புறமும் இணையாகச் சீரான அமைப்புள்ள மவுஸ்தான் சரியான ஒன்று. சில நிறுவனங்கள் இது குறித்து மருத்துவ ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு, சற்றுப் பெரிய அளவில் மவுஸ்களைத் தருகின்றன. இவை மணிக்கட்டிற்கு வேலையைக் குறைத்து கரங்கள் வழி மவுஸ் பயன்பாட்டிற்கு வழி வகுக்கின்றன.
11. மவுஸை இடது கரத்திலும் பயன்படுத்தும் வகையிலும் செட் செய்திட விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஏன் வலது கை, இடது கை என நம் வேலையை மாற்றி சில காலம் மவுஸைப் பயன்படுத்தக் கூடாது.
 
நன்றி கருப்பு ரோஜாக்கள்
http://karuppurojakal.blogspot.com/2011/11/blog-post_7126.html 

 

Monday, October 31, 2011

It is OUR LifE

  • The greatest use of a life is to spend it for something that will outlast it.--Anonymous
  • In this life  
    Be kinder than necessary,
    for everyone you meet is
    fighting some kind of battle. 
  • We are not human beings on a Spiritual journey. We are Spiritual Beings on a human journey.—Anonymous
  • Life is the art of drawing sufficient conclusions from insufficient premises. –Samuel Butler
  • An unexamined life is not worth living. – Socrates
  • When you do the common things in life in an uncommon way, that is when you command the attention of the world. --George Washington Carver
  • What you love is a clue to what you hate, and what you hate is a clue to what you love.—Chip Brogden
  • There is no right way to do the wrong thing.—Unknown    
     

Friday, February 11, 2011

எதிர்வரும் காதலர் தினத்தையொட்டி உங்களுடன் ஒரு நிமிடம்.....

எதிர்வரும் காதலர் தினத்தையொட்டி காதலர் தினம் பற்றிய சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். காதலர் தினம் உலகளாவிய ரீதியில் எங்கும் பரந்திருக்கும் காதலுக்காகவும் காதலர்களுக்காகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பொன் நாளில் கணவர்கள் தங்கள் காதல் மனைவிக்கும், ஏற்கனவே காதலித்து கொண்டிருப்பவர்களும் தங்கள் காதலனுக்கோ காதலிக்கோ மற்றும் ஒரு தலையாக காதலிப்பவர்கள் தங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்துவதற்காக ரோஜா மலர்கள் மற்றும் வித்தியாசமான பரிசுப்பொருட்கள் அன்பளிப்பதுண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் கருத்து ரோஜா மலர்களை பற்றியது.. சிவப்பு ரோஜா தான் நாம் காதலை வெளிபடுத்துவதற்காக அடையாளமாக எங்கள் மனதில் உள்ள அந்த பிடித்தமானவருக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும், ஏன் தனி சிவப்பு ரோஜா மலர் ஒன்றை கொடுக்கிறோம் என்பது தெரியுமா?
தெரியாவிட்டால் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் ....
மலர்களால் பல்வேறு உணர்வுகளை அல்லது எண்ணங்களை உங்களுக்கு பிடித்தமானவருக்கு நீங்கள் வெளிக்காட்டலாம்.. இவ்வளவு ஏன் காதலர்கள் வார்த்தைகளே இல்லாமல் மலர்களால் கூட பேசுவதுண்டு. காதலுக்கு சிறந்த அர்த்தத்தை வெளிக்காட்டும் மலர் என்றால் அது சிவப்பு ரோஜா தான். அது ஏன் தெரியுமா? சிவப்பு ரோஜா மலர் மிக அழகாக கருதப்படுவதுதான். உரோம் காலத்தில் காதலை வெளிபடுத்த ஒற்றை சிவப்பு ரோஜா மலரை தான் மாற்றிகொள்வதுண்டு. சிவப்பு ரோஜாவின் அர்த்தம் "நான் உன்னை காதலிக்கிறேன்" என்பதுதான். அவ்வாறான ரோம் காலம் தொட்டு சிவப்பு ரோஜா சுக்கிரனுக்கு( வீனஸ்) காதலின் கடவுளுக்கு அடையாளமாக கருதப்படுகிறது.

ஒற்றை வெள்ளை ரோஜா ஒன்றுக்கு இரண்டு வகை அர்த்தம் உண்டு. அதில் ஒன்று மன்னிப்புக்காக கொடுப்பது.. அதாவது தனக்கு பிரியமானவரிடம் மன்னிப்பு கேட்பவர் ஒற்றை வெள்ளை ரோஜா ஒன்றை கொடுத்தல் இந்த அர்த்தத்தை வெளிபடுத்துகிறது. இந்த வெள்ளை ரோஜாவுக்கான இரண்டாம் அர்த்தம் " நீ தூய்மையானவள்/ தூய்மையானவன், நம் காதல் தூய்மையானது என்பதை குறிக்கிறது.

ஒற்றை மஞ்சள் ரோஜா சந்தோஷத்தையும் காதலையும் வெளிபடுத்துகிறது. உங்கள் பிரியமானவருக்கு, அவருடைய அன்பான காதலில் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

உங்கள் பிரியமானவர் அழகாக இருக்கிறார் என்பதை அடையாளமாக சொல்ல விரும்பினால் ஒற்றை ஊதா ரோஜா ஒன்றை கொடுங்கள். அந்த ஒற்றை ரோஜா “நீ மிகவும் அழகாக இருக்கிறாய்" என்பதை வெளிப்படுத்துகிறது.

இளஞ்சிவப்பு நிற ரோஜா வை நீங்கள் உங்கள் பிரியமானவருக்கு கொடுத்தால் "நான் உன்னை நினைக்கிறேன்" அல்லது உன் நினைவாகவே இருக்கிறேன் என்பதை குறிக்கிறது...

ஆரேஞ் நிற ரோஜா நட்பின் சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது.

கறுப்பு ரோஜா ஒரு உறவு முடிந்து போவதை குறிக்கிறது.